கொரோனா பரவல்: அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து


கொரோனா பரவல்: அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து
x
தினத்தந்தி 22 Jun 2021 1:52 AM GMT (Updated: 22 Jun 2021 1:52 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா அறிவித்து உள்ளார்.

ஸ்ரீநகர்,

இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத்குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் 2 மாதங்கள் நடைபெறும் இந்த புனித யாத்திரையில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்துசெய்யப்படுவதாகவும், வெறும் அடையாள ரீதியான யாத்திரை மட்டுமே நடைபெறும் எனவும் காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா அறிவித்து உள்ளார்.

Next Story