மிகைப்படுத்தி 4 மடங்கு ஆக்சிஜன் பெற்றதாக புகார்: டெல்லி மக்களுக்காக போராடியது நான் செய்த குற்றம் - அரவிந்த் கெஜ்ரிவால்


மிகைப்படுத்தி 4 மடங்கு ஆக்சிஜன் பெற்றதாக புகார்: டெல்லி மக்களுக்காக போராடியது நான் செய்த குற்றம் - அரவிந்த்  கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:43 AM GMT (Updated: 25 Jun 2021 11:43 AM GMT)

மிகைப்படுத்தி 4 மடங்கு ஆக்சிஜன் பெற்றதாக தகவல் வெளியான பிறகு கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காக போராடியது தான் நான் செய்த குற்றம் என டுவிட் செய்து உள்ளார்.

புதுடெல்லி

கடந்தாண்டை விட இந்தாண்டு கொரோனா பாதிப்பு அதி தீவிரமாக இருந்தது. ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல இடங்களில் ஆக்சிஜன் தேவையும், பற்றாக்குறையும் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன. மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் சில மருத்துவமனைகள் சுப்ரீம் கோர்ட்டை  நாடியதால் டெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆக்சிஜன் தணிக்கைக் குழுவைசுப்ரீம் கோர்ட்  நியமித்தது. இக்குழுவின் இடைக்கால அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் டெல்லியில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஏற்ற அளவான 289 மெட்ரிக் டன்னை விட 4 மடங்கு கூடுதலாக 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டெல்லி மருத்துவமனைகள் கூடுதலாக பெற்றுள்ளன.

ஏப்ரல் 25 முதல் மே 10 வரை டெல்லி அரசாங்கத்தால் ஆக்ஸிஜனுக்கான தேவை இந்தியாவின் இரண்டாவது அலைக்கு நடுவில் நான்கு மடங்காக மிகைப்படுத்தப்பட்டதாக கூறுகிறது.

டெல்லியால் கோரப்பட்ட அதிகப்படியான மருத்துவ ஆக்ஸிஜன் 12 மாநிலங்களில் இரண்டாவது கொரோனா தொற்று  விநியோக நெருக்கடியை ஏற்படுத்தும். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தணிக்கைக் குழு தனது இடைக்கால அறிக்கையில் கூறியுள்ளது. "

அதிக ஆக்ஸிஜன் நுகர்வு இருப்பதாகக் கூறி டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகள் - சிங்கால் மருத்துவமனை, அருணா ஆசிப் அலி மருத்துவமனை, இஎஸ்ஐசி மாதிரி மருத்துவமனை மற்றும் லைப்ரே மருத்துவமனை ஆகியவற்றை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு டுவீட்டில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து உள்ளார். அவர் கூறி உள்ளதாவது:- 

"நான் 2 கோடி மக்களின் மூச்சுக்காக போராடியது நான் செய்த குற்றம் . நீங்கள் [பிரதமர் நரேந்திர மோடி] தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தபோது, நான் ஆக்சிஜனை ஏற்பாடு செய்ய போராடினேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உறவினர்களை இழந்துவிட்டார்கள். தயவுசெய்து பொய் சொல்லாதீர்கள், அவர்கள் மோசமாக உணர்கிறார்கள் என கூறி உள்ளார்.

Next Story