இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது

கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவது நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களைத் தொட்டு மக்களை கலங்கடித்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இப்போது தினந்தோறும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவது நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கிறது.
தினசரி தொற்று பாதிப்பும் மீண்டும் சரிவுப்பாதையில் செல்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை 46 ஆயிரத்து 617 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இது நேற்று முன் தினம் மேலும் சரிந்து 44 ஆயிரத்து 111 ஆக பதிவாகியிருந்தது. நேற்று 43,071- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு மேலும் சரிந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 39,796- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட 7.6-சதவிகிதம் இன்று குறைந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 42,352- பேர் குணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 53-வது நாளாக பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 071 ஆக குறைந்துள்ளது.
வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.40 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த மார்ச் 19 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட குறைந்தபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 723- பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story