மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் துரைமுருகன் சந்திப்பு


மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் துரைமுருகன் சந்திப்பு
x
தினத்தந்தி 6 July 2021 12:10 PM IST (Updated: 6 July 2021 12:10 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி,

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய மந்திரியை சந்தித்து பேசுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.  இந்த நிலையில், இன்று  மத்திய ஜல்சக்தி துறை  மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை துரைமுருகன் சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. 

Next Story