அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு


அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 9 July 2021 3:38 PM GMT (Updated: 9 July 2021 3:38 PM GMT)

அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை நீடிக்கும் பட்சத்தில் பிற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


Next Story