கொரோனா பரவலை கட்டுப்படுத்த திரிபுராவில் வார இறுதி ஊரடங்கு அமல்


கொரோனா பரவலை கட்டுப்படுத்த திரிபுராவில் வார இறுதி ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 10 July 2021 10:55 PM IST (Updated: 10 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

திரிபுராவில் இன்று இரவு 12 மணி முதல் வார இறுதி ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

அகர்தலா,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கா், மணிப்பூா் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு சார்பில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு நிபுணர்கள் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கிடையில் திரிபுரா மாநில அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் திரிபுரா மாநில வருவாய்த்துறை செயலாளர் தனுஸ்ரீ டெப் பர்மா, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திரிபுராவில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி திரிபுராவில் இன்று இரவு 12 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story