ஜே.இ.இ. மெயின் 4ஆம் கட்ட தேர்வு தேதி மாற்றம் - மத்திய மந்திரி அறிவிப்பு


ஜே.இ.இ. மெயின் 4ஆம் கட்ட தேர்வு தேதி மாற்றம் - மத்திய மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2021 3:49 PM GMT (Updated: 15 July 2021 3:49 PM GMT)

ஜே.இ.இ. மெயின் 4ஆம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜே.இ.இ. மெயின் 4 ஆம் கட்ட தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திரபிரதான் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

மாணவர்களின் கோரிக்கை ஏற்று, தேர்வர்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஜே.இ.இ. மெயின் 3 மற்றும் 4 ஆம் கட்ட தேர்வுக்கான இடைவெளியை 4 வாரங்களாக அதிகரிக்க தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஜே.இ.இ. மெயின் 4 ஆம் கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 26,27,28 ஆகிய தேதிகள் மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும். ஜே.இ.இ. மெயின் 4 ஆம் கட்ட தேர்வு எழுத ஏற்கனவே 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

ஜே.இ.இ. மெயின் 4 ஆம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதன் கால அவகாசம் ஜூலை 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.   

Next Story