மராட்டியத்தில் கொரோனா இல்லாத கிராமங்களில் 5,947 பள்ளிகள் திறப்பு


மராட்டியத்தில் கொரோனா இல்லாத கிராமங்களில் 5,947 பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 17 July 2021 1:57 AM IST (Updated: 17 July 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் கொரோனா இல்லாத கிராமங்களில் 5,947 பள்ளிகள் திறக்கப்பட்டன.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா இல்லாத கிராம பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்து இருந்தார். அதன்படி மாநிலத்தில் பல கிராமங்களில் நேற்று முன்தினம் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 5 ஆயிரத்து 947 பள்ளிகள் திறக்கப்பட்டது. 

முதல் நாளில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 599 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று உள்ளனர். கோலாப்பூர் மாவட்டத்தில் 940 பள்ளிகளும், புனே மாவட்டத்தில் 90 பள்ளிகளும், திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு இடங்களான சிந்துதுர்க், தானே, ஹிங்கோலி போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
1 More update

Next Story