புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி நாளை உரை
புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு பெற உள்ள பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி,
புதிய கல்விக் கொள்கை 2020- உருவாக்கி நாளை ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனால், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை மாலை 4.30 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
இதில், பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். மேலும், இந்த உரையின் போது கல்விதுறையில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story