புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்


புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 16 Aug 2021 12:47 AM IST (Updated: 16 Aug 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.



புதுச்சேரி,

இந்தியாவில் கொரோனா முதல் அலையின்போது, நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதன்பின்னர் பாதிப்பு குறைந்த காரணத்தினால் தளர்வுகள் அளிக்கப்பட்டன.  எனினும், கடந்த மே, ஜூன் மாதங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி, ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக பாதிப்புகள்
குறைந்த காரணத்தினால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தன. இதற்கிடையே கர்நாடகா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரிக்க தொடங்கிய காரணத்தினால், மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தற்போது நோய் நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

1 More update

Next Story