இமாசல பிரதேச நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு


இமாசல பிரதேச நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 Aug 2021 11:39 PM IST (Updated: 17 Aug 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.

கின்னார்,

இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ந்தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் பேருந்து, லாரி மற்றும் 4 கார்கள் சிக்கி கொண்டன.

இந்த நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் பலர் உயிரிழந்தனர்.  அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  இந்த பணியில் ஈடுபட்டு உள்ள இந்தோ-திபெத் எல்லை போலீசார் படையினர் இன்று 3 உடல்களை மீட்டு உள்ளனர்.

இதனால், இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.  முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கடந்த வியாழ கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.

1 More update

Next Story