கேரளாவில் இன்று 13,834 பேருக்கு கொரோனா - 95 பேர் பலி


கேரளாவில் இன்று 13,834 பேருக்கு கொரோனா - 95 பேர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2021 5:30 PM GMT (Updated: 1 Oct 2021 5:30 PM GMT)

கேரளாவில் இன்று 13,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 13 ஆயிரத்து 767 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்து 26 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 499  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.

Next Story