அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த ஒருவாரமாக புதிதாக தொற்று பாதிப்பு இல்லை


அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த ஒருவாரமாக புதிதாக தொற்று பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 22 Nov 2021 10:24 AM GMT (Updated: 22 Nov 2021 10:24 AM GMT)

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

போர்ட் பிளேர், 

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. தீவுக்கூட்டமான அந்தமான் நிகோபர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,646- ஆக  உள்ளது.  கடந்த 14 ஆம் தேதி அந்தமானில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. 

அதன்பிறகு இன்றைய தேதி வரையில் புதிதாக தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை.  அந்தமானில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 மட்டுமே. அந்தமானின் வடக்கு மற்றும் மத்திய பகுதி கொரோனா இல்லாத பகுதிகளாக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து நேற்று  4 பேர் குணம் அடைந்த நிலையில்,  இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,545- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. யூனியன் பிரதேசத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129- ஆக உள்ளது. அந்தமானில் இதுவரை 6,25,682-மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தொற்று பாதிப்பு விகிதம் 1.23- சதவிகிதமாக உள்ளது.  அங்கு இதுவரை  5,34,324- பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Next Story