பிபின் ராவத் உடலுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி


பிபின் ராவத் உடலுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி
x
தினத்தந்தி 9 Dec 2021 4:08 PM GMT (Updated: 9 Dec 2021 4:08 PM GMT)

பிபின் ராவத் உடலுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.

புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கோவையில் இருந்து இன்று மாலை டெல்லி கொண்டு செல்லப்பட்டது. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை விமான நிலையத்தில் 13 பேரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன. உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், டெல்லி விமானப்படை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு முப்படைகளின் தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி ஆகியோர் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

Next Story