ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2021 4:50 AM GMT (Updated: 19 Dec 2021 4:50 AM GMT)

ஜம்மு காஷ்மீரின் ஹர்வன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின்  ஹர்வன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.  

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா?என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story