புதுச்சேரியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,471 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதன் பேரில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனிடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு புதுவையில் கொரோனா தொற்று பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நாள்தோறும் தொடர்ச்சியாக பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. தொற்று காரணமாக மேலும் ஒருவர் பலியானதைத்தொடர்ந்து , மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 795 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 5 ஆயிரத்து 658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீட்டுத்தனிமையிலும் சிகிக்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story