எல்லைகளை கண்காணிக்க தனி செயற்கைக்கோள்- மத்திய அரசு திட்டம்


எல்லைகளை கண்காணிக்க தனி செயற்கைக்கோள்- மத்திய அரசு திட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 8:52 AM GMT (Updated: 23 March 2022 8:52 AM GMT)

எல்லைகளை தனி செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதற்காக மத்திய அரசு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில், தனி செயற்கைக்கோள் மூலம் எல்லைகளை கண்காணிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

எல்லைகளை கண்காணிக்க உருவாக்கப்படவுள்ள இந்த ஜிசாட் 7பி செயற்கைக்கோள் திட்டத்திற்கான பணிகளை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து இஸ்ரோ மேற்கொள்ளும் என பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு என தனிப்பட்ட செயற்கைக்கோள்கள் உள்ள நிலையில், இந்திய ராணுவத்தின் தனித்துவ பயன்பாட்டிற்காக இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story