மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை,
மகாராஷ்ட்ராவில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். நான்டெட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மருந்துகள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அரசு மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள மராட்டிய முதல் மந்திரி ஏக்நத் ஷிண்டே, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story