'274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன' - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்


274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன -  மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
x

கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளதாக மக்களவையில் மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியுள்ளார். இதுவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வனத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.


Next Story