கேரளாவில் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை


கேரளாவில் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
x

கேரளாவில் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கணவரை பிரிந்த சுனிலா என்ற பெண் (வயது 41) கடந்த 4 ஆண்டுகளாக தனது மகன் ரோகித் (வயது 19) உடன் அவரது தாயாரின் வீட்டில் வசித்து வந்தார். அவர்களுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த சுனிலாவின் சகோதரி மகன் சுபின் (வயது 25) என்பவரும் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர்களது குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர்கள் மூவரும் வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியின் காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story