உலகக் கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

உலகக் கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனாஜி,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேரை கோவா போலீசார் கைது செய்தனர். பனாஜியின் புறநகரில் உள்ள போர்வோரிம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் இவர்கள் பதுங்கி இருந்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





