'2ஜி' வழக்கில் 30-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


2ஜி வழக்கில் 30-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

‘2ஜி’ வழக்கில் 30-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

'2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார்.

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின் மேல்முறையீடு மனுவை ஏற்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ் குமார் சர்மா, மேல்முறையீடு அனுமதி மனுக்கள் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத் துறை, எதிர்மனுதாரர்கள் சார்பில் எழுத்துபூர்வமான வாதங்களை 10 பக்கங்களுக்கு மிகாமல் அக்டோபர் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்டோபர் 31-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.


Next Story