ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு


ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு
x

பீதர் அருகே ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

பீதர்:

பீதர் தாலுகா ஜனவாடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கங்காட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தா (வயது 37), சுனிதா (36). ஆனந்தாவின் மகன் பிரஜ்வல் (10), சுனிதாவின் மகன் நாகஷெட்டி (8). இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் ஆனந்தா, சுனிதா ஆகியோர் தங்களது மகன்களை அழைத்து கொண்டு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள ஏரியில் துணி துவைக்க சென்று இருந்தனர். அப்போது ஏரியில் பிரஜ்வலும், நாகஷெட்டியும் குளித்து கொண்டு இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற 2 பேரும் தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தாவும், சுனிதாவும் பிரஜ்வல், நாகஷெட்டியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் ஏரியில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 4 பேரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் ஜனவாடா போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜனவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story