பீகாரில் அதி விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி


பீகாரில் அதி விரைவு ரெயில்  தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி
x
தினத்தந்தி 11 Oct 2023 7:04 PM GMT (Updated: 12 Oct 2023 5:00 AM GMT)

பீகாரில் வடகிழக்கு அதி விரைவு ரெயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியாகினர்.

பாட்னா,

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் (12506) 6 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்றிரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டன.

இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகளை மீட்ட மீட்புக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 21 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். 60 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த வங்கி திறக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதன்படி

PNBE helpline:- 97714 49971

DNR helpline:- 89056 97493

COMM CNL:- 77590 70004

ARA helpline:- 83061 82542

ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Next Story