மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம்: 7 -வது குற்றவாளி கைது


மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம்: 7 -வது குற்றவாளி கைது
x

பழங்குடி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே 6பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை மணிப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் 7வது குற்றவாளியை மணிப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.

மணிப்பூர் பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இதுவரை 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 7பேரில் ஒருவர் பதினெட்டு வயதிற்கு குறைவான சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story