புத்தூரில் வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய 8 பேர் மீது வழக்கு


புத்தூரில்  வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:46 PM GMT)

புத்தூரில் விஷம் குடித்து வாலிபர் உயிரிழந்த வழக்கில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மங்களூரு-

புத்தூரில் விஷம் குடித்து வாலிபர் உயிரிழந்த வழக்கில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கார் டிரைவர்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கட்டத்தாறு பகுதியை சேர்ந்தவர் அப்துல் நாசிர் (வயது24). இவர் அப்பகுதியில் கார் டிரைவராக உள்ளார். இந்தநிலையில் அப்துல் கடந்த 22-ந்தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நான் பெல்லாரே பகுதியில் கார் ஓட்டி சென்றபோது, அந்தப்பகுதியில் இருந்த நபர்கள் என்னை தாக்கினர். இதனால் நான் மனமுடைந்து உள்ளேன்.

மேலும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து அவர் பெல்லாரே போலீசில் புகாரும் அளித்திருந்தார். இந்தநிலையில் அப்துல், புத்தூர் ரெயில் நிலையம் அருகே விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

8 பேர் மீது வழக்கு

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி அப்துல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அப்துலின் தாயார் எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புத்தூர் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பெல்லாரே பகுதியை சேர்ந்த சுமையா, ஆத்ரமா, மொய்து, தாஜு, அப்துல்லா, சமீர், நவபால், அதாவுல்லா ஆகிய 8 பேர் மீது புத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story