"யூடியூப் பார்த்து கருக்கலைப்பு?" - வகுப்பறையில் ரத்தப்போக்குடன் இறந்து கிடந்த மாணவி..!


யூடியூப் பார்த்து கருக்கலைப்பு? - வகுப்பறையில் ரத்தப்போக்குடன் இறந்து கிடந்த மாணவி..!
x

நெல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 19-வயது மாணவி வகுப்பறையில் ரத்தப்போக்குடன் இறந்து கிடந்தார்.

நெல்லூர்,

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி ஒருவர் கடந்த 11ம் தேதி வகுப்பறையில் ரத்த போக்குடன் உயிரிழந்தார். அவர் அருகில் ஆறு மாத சிசு ஒன்று உயிரிழந்த நிலையில், இருந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மாணவி கருக்கலைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாரா அல்லது யூடியூப் பார்த்து சொந்தமாக கருக்கலைப்பு செய்து கொள்ளும்போது மரணம் அடைந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனனர்.

மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த மாணவிக்கும் அனந்த சாகரம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனருக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. அவரைப் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். வகுப்பறையில் ரத்தப்போக்குடன் 19-வயது மாணவி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story