திருப்பதி மலையில் தொடரும் விபத்துக்கள்... தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு


திருப்பதி மலையில் தொடரும் விபத்துக்கள்... தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு
x

திருப்பதி மலையில், அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தவிர்க்க, மகா சாந்தி ஹோமம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி மலையில், அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தவிர்க்க, மகா சாந்தி ஹோமம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பக்தர்கள் மனவேதனையுடன் ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

விபத்துகளைத் தடுக்க வேக கட்டுப்பாடு, வாகன ஓட்டிகளின் முகத்தில் தண்ணீர் தெளித்தல் உள்ளிட்ட முயற்சிகளை, தேவஸ்தான நிர்வாகமும், போலீசாரும் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நேற்று ஒரே நாளில் 3 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், வரும் 14-ம் தேதி திருப்பதி மலைப்பாதையில், மகா சாந்தி ஹோமம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


Next Story