தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 602 பேருக்கு தொற்று உறுதி


தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 602 பேருக்கு தொற்று உறுதி
x

கோப்புப்படம் 

கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இருவர், அரியானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,440 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story