நடிகை ரம்யா நாளை முக்கிய அறிவிப்பை ெவளியிடுகிறார்


நடிகை ரம்யா நாளை முக்கிய  அறிவிப்பை ெவளியிடுகிறார்
x

நடிைக ரம்யா நாளை முக்கிய அறிவிப்பை ெவளியிடுகிறார்,

பெங்களூரு: கன்னடம், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், குத்து ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. மண்டியா மாவட்டத்தை சேர்ந்த இவர் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சி சார்பில் மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார்.

இதனால் அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரம்யா நேற்று தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், நாளை காலை 11.15 மணிக்கு நான் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவலை சொல்லப்போகிறேன். இது உறுதிப்பூர்வமான தகவல். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை ரம்யா மீண்டும் படத்தில் நடிப்பது தொடர்பாக விநாயகர் சதுர்த்தியான நாளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Next Story