அக்னிபத் வன்முறை: பீகாரின் 18 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்


அக்னிபத் வன்முறை: பீகாரின் 18 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்
x

image credit: ndtv.com

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் போராட்டம் வலுத்து வருகிறது.

பாட்னா,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர்.நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. பீகாரில் அக்னிபத் போராட்டத்தின்போது, ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

புதிய ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்வதால், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில், பீகாரில் போராட்டம் வலுத்து வருவதால், மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 18 மாவட்டங்களுக்கு பேஸ்புக், டுவீட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக தளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்று பீகாரில் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சய் சிங் கூறினார்.


Next Story