வரும் 27-ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்தார் - டி.ஆர்.பாலு பேட்டி


வரும் 27-ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்தார் -  டி.ஆர்.பாலு பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2024 11:14 AM GMT (Updated: 13 Jan 2024 11:22 AM GMT)

தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தது.

புதுடெல்லி,

மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது. அதன்படி தமிழக எம்பிக்கள் குழு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தது.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியதாவது ,

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறு அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம். மேலும் சுமார் ரூ. 37,000 கோடியை மத்திய அரசு உடனடியாக தருமாறு, கோரிக்கை வைத்தோம்.

மத்திய குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேரிடர் பாதிப்புக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து, வரும் 27-ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்துள்ளார் . இவ்வாறு அவர் கூறினார்.


Next Story