புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிப்பு


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2023 1:46 PM GMT (Updated: 25 Sep 2023 1:59 PM GMT)

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மிலாடி நபியை முன்னிட்டு 27-9-2023 (புதன்) பதிலாக 28-9-2023 (வியாழன்) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-9-2023 அன்று ஜிப்மரில் வெளிபுற நோயாளிகள் பிரிவு இயங்காது . இந்த தேதியில் நோயாளிகள் வெளிபுற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். 27-9-2023 அன்று ஜிப்மர் மருத்துவமனை வழக்கம் போல் இயங்கும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story