ராணுவ தளபதி எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு


ராணுவ தளபதி எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு
x

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று ஆய்வு செய்தார்.

புதுடெல்லி,

இந்திய ராணுவ தளபதி ஜென் மனோஜ் பாண்டே நேற்று இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பயணம் செய்து எல்லைக் கட்டுப்பாட்டு மையங்களில் ஆய்வு செய்தார்.

தொடர்ச்சியான கண்காணிப்புக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

அவர் தளபதியாக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக இந்த பகுதிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாநிலங்களின் எல்லையோர பகுதிகள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு மையங்களில் மேலும் 2 நாட்கள் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

ஆய்வின்போது, எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஒவ்வொரு பட்டாலியன் கமாண்டர்களிடம் கேட்டறிகிறார். மேலும் முக்கிய பகுதிகளின் படைகளின் தயார் நிலை, மலையேற்ற திறன் குழு மற்றும் நீண்ட தூர ரோந்து குழு மற்றும் கட்டமைப்புகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.


Next Story