சட்டப்பிரிவு 370 ரத்துசெய்யப்பட்ட நாள்: ஜம்முவில் இன்று அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

கோப்புப்படம்
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு, நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு, நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 4.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






