அருணாசல பிரதேசம்: இன்று அதிகாலை 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்


அருணாசல பிரதேசம்:  இன்று அதிகாலை 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
x

அருணாசல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 3-ந்தேதி காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேற்கு காமெங்,

அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், 2 மணி நேரத்திற்குள் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 3.40 மணியளவில் கிழக்கு காமெங் பகுதியில் 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

பொதுமக்கள் தூங்கி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

அருணாசல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 3-ந்தேதி காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. பாங்கின் பகுதியில் இருந்து வடக்கே 975 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.


Next Story