மராட்டியத்தில் புதிதாக 2,922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!


மராட்டியத்தில் புதிதாக 2,922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
x

கோப்புப்படம் PTI

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் இன்று 2 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 81 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் மட்டும் ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 1,47,868 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை. மராட்டியத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.94 சதவீதமாகவும் உயிரழப்போர் விகிதம் 1.86 சதவீதமாகவும் உள்ளது.


Next Story