மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்; 2 பேர் கைது


மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 22 July 2023 6:46 PM GMT)

மங்களூரு அருகே மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள பணம்பூர் கடற்கரைக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரும், மாணவிகள் 2 பேரும் வந்தனர். அவர்கள் கடற்கரையில் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கல்லூரி மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் கல்லூரி மாணவிகள் அங்கிருந்து சென்றனர். இந்தநிலையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் அவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் உருவா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேப்பகுதியை சேர்ந்த லாயிட்பிண்டோ மற்றும் தீக்ஷித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story