தேசிய கல்விக் கொள்கை: இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றும் - ஆஸ்திரேலிய மந்திரி


தேசிய கல்விக் கொள்கை: இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றும் - ஆஸ்திரேலிய மந்திரி
x

தேசிய கல்விக் கொள்கை என்பது இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றும் என்று ஆஸ்திரேலிய மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கல்வி ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியா கல்வி மந்திரி ஜேசன் கிளேர் தலைமையில் அந்த நாட்டின் உயர்கல்வித் தலைவர்களின் பிரதிநிதிகள் குழு இந்தியா வந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கல்வி மந்திரி ஜேசன் கிளேர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை என்பது தேசத்தை மாற்றும் கொள்கை ஆகும். இது இந்தியாவை மாற்றும் மற்றும் அதன் இளைய தலைமுறையை திறமைப்படுத்தும். மேலும் இது உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக மாறும் பாதையில் நாட்டை அமைக்கும்" என்றார்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் குழுவின் இந்திய வருகை குறித்து பேசிய ஜேசன் கிளேர், "இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இது ஒரு சிறந்த கூட்டாண்மையை உருவாக்க உதவும். தற்போது, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் படிப்புகளை வழங்குகின்றன. நாங்கள் படிப்புகளை வழங்குவதில் இருந்து வளாகங்களை நிறுவுவதற்கு நகர்கிறோம்" என தெரிவித்தார்.


Next Story