லஞ்ச விவகாரம்.. மஹுவா மொய்த்ரா வழக்கை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு


லஞ்ச விவகாரம்.. மஹுவா  மொய்த்ரா வழக்கை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x

பதவி நீக்கத்திற்கு எதிராக மஹுவா மொய்த்ரா, சுப்ரீம் கோர்ட்டில் ரீட் மனு தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்தது.

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா, சுப்ரீம் கோர்ட்டில் ரீட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு இன்று காலை தான் கிடைத்தது என்றும், படித்துப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story