கால்வாய்க்குள் கார் பாய்ந்தது - கர்ப்பிணி உள்பட 5 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் கால்வாய்க்குள் கார் பாய்ந்ததில் கர்ப்பிணி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் எட்டா பகுதியை சேர்ந்தவர் நீரஜ்(வயது 35). இவரது மனைவி வினிதா(25). நிறைமாக கர்ப்பிணியான வினிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை ஒரு காரில் ஏற்றி அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 2 உறவினர்களும் உடன் சென்றனர். காரை டிரைவர் சிவம் குமார் ஓட்டினார்.
சாலையில் வேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த கல்வாய்க்குள் பாய்ந்தது. இதில் காரில் இருந்த கர்ப்பிணி வினிதா உள்பட 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





