சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள் நேரடி ஒளிபரப்பு காப்புரிமையை பாதுகாக்கக் கோரும் வழக்கு - நாளை விசாரணை


சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள் நேரடி ஒளிபரப்பு காப்புரிமையை பாதுகாக்கக் கோரும் வழக்கு - நாளை விசாரணை
x

நேரடி ஒளிபரப்பு காப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புவது மற்றும் அவற்றின் தவறான பயன்பாடுகளை தவிர்ப்பது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான நடைமுறைகளை வகுத்து 2018-ல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், அரசியல் சாசன அமர்வின் விசாரணையை, நேரடியாக ஒளிபரப்பும் முயற்சி துவங்கியுள்ளது. இது யூ-டியூப் சமூக வலைதளம் வாயிலாக ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில், யூ-டியூப் என்ற தனியார் சமூக வலைதளத்துக்கு காப்புரிமை வழங்கப்படாமல், உரிய முறையில் காப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் 10-ந்தேதி(நாளை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதனை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.


Next Story