சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது


சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
x

Image Courtesy : ANI

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், ஒட்டுமொத்தமாக 87.33 சதவிகிதமான பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-வது இடத்திலும் உள்ளது.


Next Story