மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு


மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு
x

மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதையும், டெல்லியில் மாற்றுத் திறனாளிகளுக்கான துப்பாக்கி சூடுதல் உலகக்கோப்பையை இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கம் நடத்த உள்ளதையும் கருத்தில் கொண்டு, அந்த சங்கத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறுவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.




Next Story