ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விரைவில் புதிய சட்டம்: மத்திய அரசு உறுதி


ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விரைவில் புதிய சட்டம்: மத்திய அரசு உறுதி
x

கோப்புப்படம்

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

பெங்களூரு,

ஆன்லைன் விளையாட்டுகளால் பணம் இழப்பு, தற்கொலைகள் என பல்வேறு பாதிப்புகள் விளைகின்றன. எனவே இந்த விளையாட்டு தளங்களுக்கு கடிவாளம் போட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரெயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இந்த விளையாட்டுகள் தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம், குறிப்பாக அவற்றுக்கு அடிமையாவது குறித்து ஒவ்வொரு மாநிலமும் கவலை தெரிவித்து உள்ளன. இந்த விளையாட்டுகளுக்கு மக்கள் அடிமையாகி வருகின்றனர், சமூக விதிமுறைகளுக்குள் இல்லாத நடத்தையை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார்கள். இது சமூகத்தின் நல்லிணக்கத்தை பாதிக்கிறது' என்றார்.

மேலும் அவர், 'எனவேதான் அனைத்து துறையினருடனும் மிகவும் தீவிரமான ஆலோசனை செயல்முறையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அதன்படி ஒரு புதிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையை உள்ளடக்கிய சரியான கொள்கையை மிக விரைவில் கொண்டு வர முடியும்' என்று கூறினார்.


Next Story