6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை சாலக்குடி கோர்ட்டு தீர்ப்பு


6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை சாலக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 March 2023 2:15 AM IST (Updated: 25 March 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

அவரின் தாய்க்கு தெரியாமல் ஆறு வயது சிறுமியை மேல்மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலக்காடு,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (வயது 36). இவர் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் இவருடைய நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு படுத்த படுக்கையாக இருக்கும் அவரின் தாய்க்கு தெரியாமல் ஆறு வயது சிறுமியை மேல்மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது அங்கு வந்த ஒரு உறவுக்கார பெண் இதை பார்த்து விட்டார். அந்தப் பெண் வெளியே சென்றிருந்த சிறுமியின் தந்தையிடம் கூறினார். அவர் இதுகுறித்து சிறுமியின் கேட்ட போது முஜிபுர் ரஹ்மான் பல முைற தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தாள்.

இதையடுத்து அவர் இதுகுறித்து சாலக்குடி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் முஜிபுர் ரஹ்மான் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சாலக்குடி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முஜிபுர் ரஹ்மானுக்கு 40 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து முஜிபுர் ரஹ்மான் சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story