ஒவ்வொரு சீசனிலும் பார்ட்னர்களை மாற்றுகிறார்கள்.. லிவ்-இன் உறவு குறித்து நீதிமன்றம் அதிருப்தி


ஒவ்வொரு சீசனிலும் பார்ட்னர்களை மாற்றுகிறார்கள்.. லிவ்-இன் உறவு குறித்து நீதிமன்றம் அதிருப்தி
x

ஒரு நபருக்கு திருமண பந்தம் வழங்கும் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை லிவ்-இன் உறவில் கிடைப்பதில்லை.

உத்தர பிரதேச மாநிலம் சகாரன்பூரைச் சேர்ந்த 19 வயது பெண், அவரது காதலனுடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். ஓராண்டாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்யும்படி காதலனிடம் கூறியிருக்கிறார். காதலன் மறுப்பு தெரிவிக்கவே, அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனை கைது செய்தனர்.

அவர் ஜாமீன் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், லிவ்-இன் டுகெதர் வாழ்க்கை முறை குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார்.

"ஒரு நபருக்கு திருமண பந்தம் வழங்கும் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை லிவ்-இன் உறவில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு சீசனிலும் துணைகளை (பார்ட்னர்) மாற்றுவது என்ற மோசமான கருத்தை, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக கருத முடியாது.

இந்தியாவில் நடுத்தர வர்க்க ஒழுக்க நெறியை புறக்கணிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் பல நாடுகளில் திருமண பந்தத்தை பாதுகாப்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது. அதேபோல், இந்த நாட்டில் திருமண பந்தம் வழக்கற்றுப் போன பிறகுதான் லிவ்-இன் உறவு சாதாரணமாக கருதப்படும். நீண்டகால விளைவுகளைப் பற்றி அறியாமல் இளைஞர்கள் இதுபோன்ற உறவினால் ஈர்க்கப்படுகிறார்கள்" என்று நீதிபதி குறிப்பிட்டார்.


Next Story