நீரிழிவுக்கு மலிவு விலை மாத்திரை - மத்திய அரசு அறிமுகம்


நீரிழிவுக்கு மலிவு விலை மாத்திரை - மத்திய அரசு அறிமுகம்
x

டைப்-2 நீரிழிவுக்கு ‘சிடாக்லிப்டின்’ என்ற மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

புதுடெல்லி,

மத்திய அரசு திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 8 ஆயிரத்து 700-க்கு மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஜெனரிக் மருந்துகள், மாத்திரைகள், அதே மருந்து கொண்ட கம்பெனி மாத்திரைகளின் விலையை விட மலிவான விலையில் விற்கப்படுகின்றன.

இந்தநிலையில், டைப்-2 நீரிழிவுக்கு 'சிடாக்லிப்டின்' என்ற மாத்திரையை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்தது. இந்த மாத்திரைகள் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.

50 மி.கி. கொண்ட 10 சிடாக்லிப்டின் பாஸ்பேட் மாத்திரைகள் அடங்கிய அட்டை ரூ.60-க்கு விற்கப்படும். 100 மி.கி. கொண்ட அம்மாத்திரை அட்டையின் விலை ரூ.100.

சிடாக்லிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு இணைந்த கலவை மாத்திரைகள் ரூ.65 மற்றும் ரூ.70-க்கு கிடைக்கும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே மருந்து கொண்ட கம்பெனி மாத்திரைகள், ரூ.162 முதல் ரூ.258 வரை விற்கப்படுவதாகவும் கூறியுள்ளது.


Next Story