6 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது


6 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

மைசூரு அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த 6 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.

மைசூரு:

மைசூரு தாலுகா வருணா அருகே மாதவகெரே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த 15 நாட்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் பீதியடைந்த அந்தப்பகுதி மக்கள், அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தப்பகுதியில் இரும்பு கூண்டு வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, வனத்துறையினர் வைத்த கூண்டில் வசமாக சிக்கிக் கொண்டது.

இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், இரும்பு கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அது 6 வயது நிரம்பிய ஆண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தையை நாகரஒலே வனப்பகுதியில் விட நடவடிக்ைக எடுக்கப்படும் என்றார்.


Next Story