சிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


சிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா இரேகொலே கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது30). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அருகே உள்ள குளத்திற்கு சந்தோஷ் நண்பர்கள் 4 பேருடன் சென்றார். அப்போது அவர்கள் குளத்தில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தோஷ் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த நண்பர்கள் சந்தோசை காப்பாற்ற சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ளவர்களை அழைத்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சந்தோஷ் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பிணமாக மீட்டனர்

அதன்பேரில், போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் குளத்தில் குதித்து சந்தோசை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று காலை சந்தோசை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவரை பிணமாக மீட்டனர். பின்னர் சந்தோஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story